உள்ளூர் செய்திகள் (District)

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு 2 புதிய சேவை-சலுகை

Published On 2024-10-02 07:48 GMT   |   Update On 2024-10-02 07:48 GMT
  • பி.எஸ்.என்.எல். எப்.டி.டி.எச். வை-பை வசதிகள் உள்ள அனைத்து இடங்களில் பெறலாம்.
  • 500-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் வழங்கப்படும்.

சென்னை:

பி.எஸ்.என்.எல். நிறுவன தினத்தையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் "சர்வத்ரா-பி.எஸ்.என்.எல். வை-பை" மற்றும் இண்ட்ராநெட் டெலிவிஷன் என்ற இரண்டு புதிய சேவையை பரிசோதனை அடிப்படையில் எப்.டி.டி.எச். வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

சர்வத்ரா-பி.எஸ்.என்.எல். வை-பை ரோமிங் சேவையை பெற பி.எஸ்.என்.எல். எப்.டி.டி.எச். வாடிக்கையாளர்கள் http:/portal.bsnl.in/ftth/wigiroming என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொண்டு தங்களின் வெளியூர் பயணங்களின் போது இணைய தளத்தில் இணைந்திருக்க முடியும்.

இந்த சேவையை பி.எஸ்.என்.எல். எப்.டி.டி.எச். வை-பை வசதிகள் உள்ள அனைத்து இடங்களில் பெறலாம்.

இதற்கான டேட்டா தரவுகள் வாடிக்கையாளர்களின் தற்போதைய தேர்ந்து எடுக்கப்பட்ட திட்டத்தில் இருந்தே கழிக்கப்படும். வை-பை ரோமிங் சேவைக்கு தனியாக கட்டணம் கிடையாது.

இண்ட்ராநெட் பைபர் டெலிவிஷன் சேவையை ஆண்ட்ராய்டு-10 மற்றும் அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட் டி.வி.யில் எப்.டி.டி.எச். வாடிக்கையாளர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் வழங்கப்படும்.

மேலும் ஒரு சலுகையாக இந்த மாதம் 24-ந்தேதி வரை ரூ.500 மற்றும் அதற்கு அதிகமாக ரீசார்ஜ் செய்யும் பிரிபெய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 24 நாட்கள் செல்லுபடியாகத்தக்க 24 ஜி.பி. டேடா கூடுதலாக வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News