உள்ளூர் செய்திகள் (District)

சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்

Published On 2024-08-21 06:18 GMT   |   Update On 2024-08-21 06:18 GMT
  • மெமு சிறப்பு ரெயில் இன்று திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும்.
  • மின்சார ரெயில் நாளை மற்றும் 24-ந்தேதிகளில் திருவள்ளூருடன் நிறுத்தப்படும்.

சென்னை:

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரெயில் இன்று (21-ந் தேதி) வரை திருத்தணி வரை மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளை மற்றும் 24-ந் தேதிகளிலும் இந்த மாற்றம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9.10, 11 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் மற்றும் திருத்தணிக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் 24-ந் தேதிகளில் திருவள்ளூருடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக அரக்கோணத்தில் இருந்து காலை 11.15, பகல் 12 மணிக்கும், திருத்தணியில் இருந்து பகல் 12.35 மணிக்கும் புறப்பட வேண்டிய மின்சார ரெயில்கள் திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு சென்ட்ரல் வந்தடையும்.

வேலூா் கன்டோன்மன்டில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் சித்தேரி வரை மட்டும் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News