உள்ளூர் செய்திகள் (District)

பாளை ஜெயிலில் கைதிகள் இடையே மோதல்- 4 பேர் மீது வழக்கு

Published On 2024-05-17 05:37 GMT   |   Update On 2024-05-17 05:37 GMT
  • கைதிகள் அனைவரும் சாப்பாடு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
  • போலீசார் பேரின்பராஜ் மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

நெல்லை:

பாளை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

இங்கு அடிக்கடி கைதிகளுக்குள் மோதல் நடப்பதும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் இரவு கைதிகள் அனைவரும் சாப்பாடு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது விசாரணை கைதியான நெல்லையை சேர்ந்த பேரின்பராஜ் என்பவருக்கும், சக கைதிகளான முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்த ராஜூ மகன் மணிகண்டன், அத்தாள நல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால், தூத்துக்குடி டி.வி.கே. நகரை சேர்ந்த பரத் விக்னேஷ் ஆகியோர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த ஜெயில் வார்டன்கள் உடனடியாக அங்கு வந்து அவர்களை பிடித்து சென்றனர்.

இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) முனியாண்டி பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பேரின்பராஜ் மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News