உள்ளூர் செய்திகள்

முதலைமுத்து வாரியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

முதலைமுத்து வாரியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு

Published On 2023-05-16 10:10 GMT   |   Update On 2023-05-16 10:10 GMT
  • ரூ.90 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
  • ஆனந்தக்காவிரி வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டை ஊராட்சியில் உள்ள முதலைமுத்து வாரியில் தூர்வாரும் பணியை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது :-

2023-24-ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்ட ங்களில் ஆறுகள், கால்வா ய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 691 பணிகள் 4773.13 கி.மீ நீளத்திற்கு ரூ.90.00 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள அரசாணை வழங்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், கால்வா ய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றில் 189 பணிகள்.

1068.45 கி.மீ நீளத்திற்கு ரூ.2045.51 லட்சம் மதிப்பீட்டிற்கு ஒப்பளிக்க ப்பட்டதை தொடர்ந்து, ஏப்ரல் 27ஆம் தேதி அன்று நீர்வளத்துறை அமைச்சர் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், ஆனந்தக்காவிரி வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடக்கி வைத்தார்.

மேற்காணும் தூர்வாரும் பணிகள் கீழ்காவிரி வடிநில வட்டத்தைச் சார்ந்த கோட்டங்களான காவிரி வடிநிலக் கோட்டம். தஞ்சாவூர், காவிரி வடிநிலக் கோட்டம், (கிழக்கு) மயிலாடுதுறை, வெண்ணாறு வடிநிலக் கோட்டம், தஞ்சா வூர், கல்லணைக்கால்வாய் கோட்டம், தஞ்சாவூர் அக்னியாறு வடிநிலக் கோட்டம், பட்டுக்கோட்டை மற்றும் திருச்சி, நடுக்காவிரி வடிநில வட்டத்தை சார்ந்த திருச்சி, ஆற்றுப்பாதுகாப்பு கோட்டங்களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அ l பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி 31.05.2023 மற்றும் "ஆ" பிரிவு வாய்க்கால்கள் 10.06.2023க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 189 தூர்வாரும் பணி பணிகளில் பணிகள் 3 முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

ஆறுகள், கால்வாய்கள். வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் எரிகள் ஆகியவற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடையும். மேலும், மழை பெய்தால் தங்குதடையின்றி விரைவாக மற்றும் வெள்ளக்கா லங்களில் வயல்வெளிகளில் தேங்கும் நீரானது விரைவில் வடிந்து பயிர் சேதும் ஏற்படாமல் பாதுகாக்க ப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணி செயற்பொறியாளர் இளங்கோ காவேரி, மதன சுதாகர், (வெண்ணாறு) பவளக்கண்ணன், (கல்லணை கால்வாய் ) உதவி செயற்பொறியாளர் சிவகுமார், மலர்விழி, சபரிநாதன், ரேவதி சேந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News