உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-18 09:30 GMT   |   Update On 2022-10-18 09:30 GMT
  • தேர்வு கட்டணம் உயர்வுக்கு கண்டனம்.
  • பழைய கட்டணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த, கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலம், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக தொடங்கப்பட்டு, தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆக மாறி உள்ளது நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

தற்போது தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து, கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், கட்டணம் உயர்த்தப்பட்டதை கைவிடக்கோரியும், ஏற்கனவே வாங்கிய பழைய கட்டணத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கடந்த செமஸ்டர் தேர்வில் இளங்கலையில் தேர்வு கட்டணம் 75 ரூபாய் இருந்ததை தற்போது 120 ரூபாயும், முதுகலையில் 150 ரூபாய் இருந்த தேர்வு கட்டணம் தற்போது 200 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல் செய்முறை கட்டணமும் உயர்ந்துள்ளதால் பழைய கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News