உள்ளூர் செய்திகள்

மாற்றுத் திறனாளிகள் வீல் சேருடன் பயணிக்க கண்டக்டர் உதவ வேண்டும்- போக்குவரத்து கழகம்

Published On 2024-08-12 06:47 GMT   |   Update On 2024-08-12 06:47 GMT
  • புதிய தாழ்தள பஸ்களில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க வசதி
  • டிரைவர்-கண்டக்டர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் அறிவுரை

சென்னை:

சென்னையில் ஓடும் புதிய தாழ்தள பஸ்களில் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் சென்று பயணம் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மாற்றுத் திறனாளிகளை ஏற்றி இறக்கு வதற்கு டிரைவர்-கண்டக்டர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் அறிவுரைகளை வழங்கி உள்ளது.

மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் பயணிக்க முற்படும் போது, சக்கர நாற்காலிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் உள்ள சாய்தளத்தை உபயோகப்படுத்தி அவர்கள் ஏறு வதற்கு உதவி செய்ய வேண்டும்.

பயணம் செய்யும் போது அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் சக்கர நாற்காலிகளை பஸ்சில் அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் 'லாக்' செய்ய கண்டக்டர்கள் உதவ வேண்டும்.

அதேபோல் மாற்றுத் திறனாளிகள் இறங்கும் போது சாய்தள படிக்கட்டை இயக்கி சக்கர நாற்காலியுடன் பஸ்சில் இருந்து பாதுகாப்பாக இறங்க உதவ வேண்டும். இதில் எவ்வித புகாரும் வராத வகையில் டிரைவர்-கண்டக்டர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News