உள்ளூர் செய்திகள்

ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

சாயர்புரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

Published On 2023-07-19 08:40 GMT   |   Update On 2023-07-19 08:40 GMT
  • சாயர்புரத்தில் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் கலந்து கொண்டு பள்ளி மாணவ -மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தூத்துக்குடி:

சாயர்புரத்தில் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர தலைவர் ஜெயக்குமார் சந்தோஷ் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் சொரிமுத்து பிரதாபன், ஜெயசீலன் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் கலந்து கொண்டு பள்ளி மாணவ -மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சங்கர், பொருளாளர் எடிசன், ஊடக பிரிவு தலைவர் முத்துமணி, தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசைசங்கர், சாயர்புரம் பேரூராட்சி துணைத் தலைவர் பிரியாமேரி, கவுன்சிலர் இந்திரா, வட்டார துணைத் தலைவர் பிச்சை மணி, நிர்வாகிகள் விக்டர் சத்தியதாஸ், சூசைமாணிக்கம், ஜெயசிங் மற்றும் மாணவ- மாணவிகள், பெற்றார்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News