உள்ளூர் செய்திகள் (District)

தமிழகம் முழுவதும் 77 இடங்களில் நாளை காங்கிரஸ் பாத யாத்திரை

Published On 2024-10-01 07:53 GMT   |   Update On 2024-10-01 07:53 GMT
  • அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகில் இருந்து புறப்படுகிறது.
  • எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் பாதயாத்திரை.

சென்னை:

தமிழகம் முழுவதும் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி பாத யாத்திரை நடத்த காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் வெறுப்பு, அரசியலுக்கு எதிராகவும் நடத்தப்படும் இந்த பாத யாத்திரை சென்னையில் நாளை (2-ந் தேதி) காலை 7 மணியளவில் அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகில் இருந்து புறப்படுகிறது.

மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் இந்த பாத யாத்திரை மேதின பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை, ரமடா ஓட்டல் சந்திப்பு, லாங்ஸ் கார்டன், புதுப்பேட்டை, பாந்தியன் ரோடு வழியாக அருங்காட்சியகத்தை அடைகிறது. அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பிரகாரத்தை நிறைவு செய்கிறார்கள்.

இதேபோல் நாளை மாநிலம் முழுவதும் 77 இடங்களில் பாத யாத்திரை நடக்கிறது. திருச்சியில் திருநாவுக்கரசர் தலைமையிலும், ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையிலும் சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையிலும் இதேபோல் ஒவ்வொரு இடத்திலும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமையிலும் பாத யாத்திரை நடக்கிறது.

Tags:    

Similar News