உள்ளூர் செய்திகள்

குவாரிகள் இரவு, பகலாக இயங்குவதை தடை செய்ய வேண்டும்-முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2023-06-25 08:50 GMT   |   Update On 2023-06-25 08:50 GMT
  • டிரைவர் வாகனம் ஓட்டும்போது அயர்ந்து தூங்கியதால் விபத்து நடைபெற்றது.
  • இரவு பகலாக குவாரிகள் இயங்குவதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கடையம்:

அம்பை, தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், இயற்கை வள பாதுகாப்பு சங்கத் தலைவருமான ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கனிம வளங்கள்

கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு 24 மணி நேரமும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு, பகலாக தூங்காமல் கனரக வாகனங்களை இயக்குவதால் அடிக்கடி தென் மாவட்டங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் களக்காட்டில் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இதேபோன்று தென்காசி மாவட்டம் திரவியநகர் அருகே டிரைவர் வாகனம் ஓட்டும்போது அயர்ந்து தூங்கியதால் அங்கேயும் ஒரு விபத்து நடைபெற்றது.

இது போன்று குற்றா லத்தில் பள்ளி செல்லும் சிறுவன் மீது வாகனம் ஏற்றி விபத்துக் குள்ளானதால் அந்த சிறுவன் நடக்க முடியாத நிலையில் இருக்கிறான். அதேபோன்று இலஞ்சியிலும் ஒரு வாகன விபத்தும் நடைபெற்றது.

இது போன்று தொழிலாளர் நல சட்டங்களுக்கு விரோதமாக இரவு, பகல் கனிம வளங்களை கொண்டு செல்லலாம் என்று உத்தரவிட்டிருப்பது சாலையில் செல்லும் பாத சாரிகளுக்கும், வாகனத்தில் செல்பவர்களுக்கும் இந்த வாகனங்களால் விபத்து ஏற்படுகிற ஒரு சூழ்நிலை இருக்கின்றது.

திரும்ப பெற வேண்டும்

இரவு பகலாக குவாரிகள் இயங்குவதால் அங்கே நிலச்சரிவு ஏற்படுகிற ஒரு வாய்ப்பு இருக்கிறது.

எனவே தொழிலாளர் நல சட்டத்திற்கு விரோதமாக இரவு- பகலாக குவாரிகள் இயங்குவதை பொது மக்களின் நலன் கருதி உடனடியாக அதை அரசு திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News