உள்ளூர் செய்திகள்

புதுச்சேரியில் செயல்படாத 86 கூட்டுறவு சங்கங்கள் கலைப்பு

Published On 2024-08-18 06:08 GMT   |   Update On 2024-08-18 06:08 GMT
  • கூட்டுறவு பதிவாளர் தீவிர விசாரணை.
  • 6,237 சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி:

புதுச்சேரியில் ஊழி யர்கள், உறுப்பினர்கள் நலனுக்கான கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்படு கின்றன. சங்க உறுப்பினர் களிடமிருந்து நிதி திரட்டி இந்த சங்கங்கள் வழியாக கடனுதவி, நலத்திட்டங்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்கின்றன.

இந்த கூட்டுறவு சங்கங்கள், புதுச்சேரி கூட்டுறவு சொசைட்டி சட்டத்தின் கீழ் கூட்டுறவு துறையில் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான சங்கங்கள், முறையாக செயல்படாமல் பெயரளவுக்கு உள்ளதாக, கூட்டுறவு துறைக்கு புகார்கள் சென்றன.

இது தொடர்பாக கூட்டுறவு பதிவாளர் தீவிர விசாரணை நடத்தினார். இதனை யடுத்து தற்போது 86 கூட்டுறவு சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை கூட்டு றவு பதிவாளர் யஸ்வந்தையா பிறப்பித்தார்.

இந்த பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி பொறியியல் கல்லூரி, எரிசாராய ஆலை, காவலர், சுதேசி காட்டன் மில் உள்பட பல்வேறு அரசு ஊழியர்களின் கூட்டுறவு சங்கங்களும் அடங்கியுள்ளன.

இந்த கலைப்பு பட்டியல் அரசாணையாக பொது மக்களின் பார்வைக்காக தற்போது வெளியிடப் பட்டுள்ளன.

புதுச்சேரியில் ஏற்கனவே கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை 1256 சங்கங்களும், 1996-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை 1512 சங்கங்களும் கலைக்கப்பட்டுள்ளன.

கடந்த 32 ஆண்டுகளில் புதுச்சேரியில் செயல்படாத 6,237 சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடியை இந்திய கம்பெனியின் மாவட்ட சங்கங்களின் பதிவாளர் எடுத்து இருந்தார்.

தற்போது அந்த வரிசையில் கூட்டுறவு பதிவாளரும் இறங்கி, கூட்டுறவு சங்கங்களை அதிரடியாக கலைத்துள்ளார். இந்த கூட்டுறவு சங்கங்கள் செயல் படுகின்றதா? என்பதை அறிய பல முறை, நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அதற்கு முறையான பதில் வரவில்லை.

சங்க முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதங்களும் திரும்பி வந்தது. இதனையடுத்து அதிரடியாக 86 கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News