உள்ளூர் செய்திகள்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 4 பேர் சிறையில் அடைப்பு

Published On 2023-02-24 09:47 GMT   |   Update On 2023-02-24 09:47 GMT
  • கொலை செய்தமைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிபதி வழங்கினார்.
  • 4 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.

ஆப்பக்கூடல்:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முன் விரோதம் காரணமாக சதீஷ்குமார் வேலை செய்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் சதிஷ்குமாரை வெட்டி கொலை செய்தனர்.

இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர்.

இந்த வழக்கானது பவானி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி லதா தீர்ப்பு கூறினார்.

இதில் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் (45), ஆனந்த பிரபு (37), சூரியகுமார் (27) மற்றும் வெங்கடேஷ்குமார் (38) ஆகிய 4 பேருக்கும் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

மேலும் வீடு புகுந்து அத்துமீறி கொலை செய்த மைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிபதி வழங்கினார். இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.

Tags:    

Similar News