உள்ளூர் செய்திகள் (District)

அந்தியூர் போலீஸ் நிலையம் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு

Published On 2023-06-26 10:18 GMT   |   Update On 2023-06-26 10:18 GMT
  • டி.ஐ.ஜி. முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்தார்
  • ஈரோடு மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக அந்தியூர் போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது

அந்தியூர்

தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது வழங்கப்படுகிறது.அதற்காக கடந்த ஆண்டு டி.ஐ.ஜி. முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்தார்.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக அந்தியூர் போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் மாவட்டத்தில் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு சிறந்த பெருமை கிடைத்து ள்ளது. அந்தியூர் போலீஸ் நிலைய த்தில் வழக்கு பதிவு செய்வது முதல் குற்றவாளி களை பிடிப்பது காவல் நிலையத்தை தூய்மையாக வைத்திருப்பது,

பெண் கைதிகள் குழந்தைகளுடன் வரும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த குழந்தைகள் விளை யாடு வதற்கு போதிய விளையாட்டு பொம்மைகள் காவல் நிலையத்தின் மேல்மாடியில் தனியறையில் வைத்திருப்பது, காவல் நிலையம் முன் பூங்காக்கள் வைத்து பராமரித்து இரு ப்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை திறன்பட செய்திருப்பதன் அடிப்ப டையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை பெறுவதற்காக அந்தியூர் போலீஸ் நிலை யத்தில் இருந்து.நிலைய பொறுப்பு அதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சென்னை செல்ல உள்ளார். அவருக்கு டி.ஜி.பி. சைலேந்தி ரபாபு விருது வழங்க உள்ளார்.

Tags:    

Similar News