உள்ளூர் செய்திகள் (District)

கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு: இரு தரப்பினரிடையே மோதல்: 4 பேர் கைது

Published On 2023-11-23 09:45 GMT   |   Update On 2023-11-23 09:45 GMT
  • ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
  • காரை வழிமறித்து உறவினர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஏரியூர்,  

ஏரியூர் அருகே உள்ள கோடல்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர், இவர் திருப்பதியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், பெரும்பா லையை சேர்ந்த ஜெய்ஸ்ரீ என்பவருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஜெயஸ்ரீ கணவரை விட்டு பிரிந்து தனது தாய் வீடான பெரும்பாலையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மனைவி யை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, ராஜசேகர் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம், பெரும்பா லையில் உள்ள ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவர் மாமனாரை தாக்கி யதாகவும் கூறப்ப டுகிறது.

இதனை தொடர்ந்து தனது மனைவியை தன்னு டன் சேர்த்து வைக்க கோரி பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதே போல மாமனாரை தாக்கி யதாக ஜேய்ஸ்ரீ உறவி னர்கள் ராஜசேகர் மீது புகார் அளித்தனர். இந்நிலையில் விசார ணைக்காக பெரும்பாலை போலீசார் இரு குடும்ப த்தையும் போலீஸ் நிலையம் வரவழைத்துள்ளனர்.

இதனை அறிந்த ஜெய்ஸ்ரீ உறவினர்களான ஜெயரா மன் (41) சண்முகம் (24) கணேசன் (31) பார்த்திபன் (26) உள்ளிட்ட 5 பேர் பெரும்பாலை நுழை வாயிலில் நின்று ராஜசேகர் வந்த ஆம்னி காரை வழிமறித்து அதில் இருந்த அவரது உறவினர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் காயம் அடைந்த மாதம்மாள், விக்ரமன் (28 )ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து பெரும்பாலையைச் சேர்ந்த ஜெயராமன் சண்முகம், கணேசன், பார்த்திபன் ஆகிய 4 கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Similar News