உள்ளூர் செய்திகள் (District)

மன்னார்குடி அருகே அரசு பஸ் மோதி தந்தை-மகள் பலி

Published On 2023-05-06 08:37 GMT   |   Update On 2023-05-06 08:37 GMT
  • திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
  • விபத்தில் மீனாட்சி சுந்தரமும் அவரது மகள் மதுமதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடபாதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 55). விவசாயி. இவரது உறவினர் ஒருவருக்கு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தையை பார்ப்பதற்காக மீனாட்சி சுந்தரம், தனது மகள் மதுமதி (29), மீனாட்சி சுந்தரத்தின் பேத்திகள் 2 பேர் ஆகிய 4 பேருடன் திருவாரூருக்கு புறப்பட்டார்.

திருவாரூர்-மன்னார்குடி சாலையில் சவளக்காரன் என்ற இடத்தில் சென்றபோது திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மீனாட்சி சுந்தரமும் அவரது மகள் மதுமதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேத்திகள் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் இறந்த மீனாட்சிசுந்தரம் மற்றும் அவரது மகள் மதுமதி உடலை பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News