உள்ளூர் செய்திகள்

பார்வர்டு பிளாக் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-26 07:37 GMT   |   Update On 2022-12-26 07:37 GMT
  • ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில துணை தலைவர் கர்ணன் தலைமை தாங்கினார்.
  • அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

திருப்பூர் :

மத்திய அரசை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிற்சங்கத்தின் சார்பில் பார்வர்டு பிளாக் தொழிற்சங்கத்தின் சார்பில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில துணை தலைவர் கர்ணன் தலைமை தாங்கினார். தொழிற்சங்க மாநில தலைவர் நல்லமுத்து, மாநில பொதுச்செயலாளர் திருப்பதி, மாநில பொருளாளர் மோகன், மத்தியக்–குழு உறுப்பினர்கள் காளிமுத்து, வடிவேல், முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ராஜசேகர் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். நூல் விலையை குறைத்து தொழிலை பாதுகாக்க வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News