உள்ளூர் செய்திகள்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

Published On 2024-06-30 06:21 GMT   |   Update On 2024-06-30 06:21 GMT
  • மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  • இந்திய வீரர்கள் மென்மேலும் வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய கிரிக்கெட் வீரர் கள் 2007-ம் ஆண்டிற்கு பிறகு தற்பொழுது 2-வது முறையாக 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றிருப்பது பாராட்டுக்குரியது. இந்திய வீரர்களின் அசாத்திய திறமையாலும், கடின உழைப்பாலும் இந்தி யாவிற்கு வெற்றியும், பெருமையையும் தேடித்தந்தி ருக்கின்றார்கள். இந்திய கிரிக்கெட் வீரார்களின் இந்த சாதனைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

விளையாட்டுத் துறையில் இந்திய வீரர்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார்கள். வருங்காலங்களிலும் அவர்களின் வெற்றி தொடர வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி விளையாட்டுத் துறைக்கு தேவையான அனைத்து ஆக்கபூர்வமான உதவிகளையும், ஊக்கத்தையும் அளித்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இந்திய வீரர்கள் மென்மேலும் வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News