உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் 2-வது நாளாக கனமழை: சாலைகளில் மழைநீருடன் பெருக்கெடுத்து ஓடிய கழிவு நீர்

Published On 2024-10-08 07:08 GMT   |   Update On 2024-10-08 07:08 GMT
  • வாகனங்கள் செல்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது.
  • அரசு மருத்துவமனை கேண்டீனுக்குள் மழைநீர் புகுந்தது.

கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்தது.

நேற்று 2-வது நாளாக கோவை மாநகர் பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாலையில் தொடங்கிய மழையானது இரவு வரை 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.

அதிகளவிலான தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது. வாகனங்கள் மெல்ல, மெல்ல ஊர்ந்து சென்றதால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் பல அடி தூரத்திற்கு காத்து நின்று ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.

இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனர். கோவை அரசு ஆஸ்பத்திரி தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே புகுந்து விடும்.

மழைநீர் புகாமல் இருக்க அந்த பகுதி உயர்த்தி தளம் அமைக்கப்பட்டது. ஆனால் நேற்று பெய்த மழைக்கு அரசு மருத்துவமனை கேண்டீனுக்குள் மழைநீர் புகுந்தது. அங்கிருந்து மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து எம்.எம். 4 கட்டிடத்தின் வார்டுகளுக்குள் புகுந்தது.

இதனால் அங்கு கடும் தூர்நாற்றம் வீசியது. நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகினர். உடனடியாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் வார்டுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News