உள்ளூர் செய்திகள் (District)

திருப்பூரில் பலத்த மழை: நீர்வரத்து அதிகரிப்பால் அமராவதி அணை நிரம்பியது

Published On 2024-08-12 04:34 GMT   |   Update On 2024-08-12 04:34 GMT
  • சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
  • தற்போது அணைக்கு 627 கனஅடி நீர்வரத்து உள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

கடந்த 2 நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மழையின் காரணமாக குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருப்பூர் ஆண்டிப்பாளையம் குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது.

உடுமலை அமராவதி அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 90 அடி உயரமுள்ள அணை யில் தற்போது 88.88 அடியாக நீர்மட்டம் உயர்ந்து ள்ளது. முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

இதனால் ஆற்றில் கூடுதலாக உபரிநீர் திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தற்போது அணைக்கு 627 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து 790 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

திருப்பூர் வடக்கு-35, கலெக்டர் முகாம் அலு வலகம்-74, திருப்பூர் தெற்கு -43, கலெக்டர் அலுவ லகம்-23, அவினாசி -33, ஊத்துக்குளி-50, பல்லடம்-20,தாராபுரம்-19,உப்பாறு அணை-11, காங்கயம்-14,வெள்ளகோவில் ஆர்.ஐ. அலுவலகம்-3,வட்டமலை க்கரை ஓடை அணை-3.60, உடுமலைபேட்டை-7.20, அமராவதி அணை-18, திருமூர்த்தி அணை-2, மடத்துக்குளம்-10. மாவட்டம் முழுவதும் மொத்தம் 367.80 மி.மீ., மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News