மீண்டும் குற்றசெயலில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைப்பு
- எந்த ஒரு தவறும் செய்ய மாட்டோம் என ஒப்புதல் கொடுத்து திருந்தி வாழ்வதாக கூறி வெளியே வந்தனர்.
- ஒரு வருட காலம் முடிவதற்குள் இருவரும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அந்தஉச்சிமேடு பகுதியை சேர்ந்த முக்கூட்டு முருகன் மற்றும் தென்னங்குடி பகுதியை சேர்ந்த சூர்யா.
இவர்கள் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
நன்னடத்தை பத்திரத்தின் கீழ் எந்த ஒரு தவறும் செய்ய மாட்டோம் என ஒப்புதல் கொடுத்து திருந்தி வாழ்வதாக கூறி வெளியே வந்தனர்.
இந்த நன்னடத்தை பத்திரத்தின் படி ஒரு வருட காலம் எந்த ஒரு குற்ற வழக்கிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
ஆனால் ஒரு வருட காலம் முடிவதற்குள் இருவரும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளனர்.
சீர்காழி போலீசார் அறிவுறுத்தலின்படி சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா உத்தரவின்படி இருவரையும் குற்றவியல் நடைமுறை சட்டம் 110 விதியின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், முக்கூ ட்டு முருகன், சூர்யா இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.