உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டினத்தில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

Published On 2022-12-06 08:50 GMT   |   Update On 2022-12-06 08:50 GMT
  • ஊர்வலமாக காவேரிப்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு வந்தடைந்தனர்.
  • மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

காவேரிப்பட்டினம்,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, நகர செயலாளர் விமல் ஆகியோர் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

காவேரிப்பட்டினம்- பாலக்கோடு பிரிவு சாலையில் இருந்து ஜெயலலிதா உருவ படத்தை கையில் ஏந்தி ஊர்வலமாக காவேரிப்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு வந்தடைந்தனர்.

பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உருவ படத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம். சதீஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கடப்பன், முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், மாவட்ட ஆவின் தலைவர் குப்புசாமி, மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார், கவுன்சிலர் சங்கீதா கேசவன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News