உள்ளூர் செய்திகள் (District)

தொடர் மழை: கொடிவேரி தடுப்பணையில் குளிக்க 2 நாட்களுக்கு தடை

Published On 2024-10-15 04:39 GMT   |   Update On 2024-10-15 04:39 GMT
  • 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • தடுப்பணையில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து 300 மீட்டர் நீளத்திற்கு அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது.

இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

அதேபோல் மாவட்ட த்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. அதே போல் ஈரோடு, கோபி, சத்தி, அந்தியூர் மற்றும் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கிறது.

இதனால் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்ப ணைக்கு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வருகிறது. மழையால் மக்கள் கொடிவேரி அணைக்கு மக்கள் வருவதை தவிர்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பருவ மழை தீவிரம் அடைந்து வருவதால் தமிழகத்தில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டகளில் கடந்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதனால் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பி உள்ளது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படவும் தொடர்ந்து கொடிவேரி தடுப்பணையில் நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கொடிவேரி தடுப்பணையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை (புதன் கிழமை) ஆகிய 2 நாட்கள் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தடை விதிக்கப்படு கிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறிம் போது, தொடர் மழை காரணமாக பாதுகாப்பு கருதி கொடிவேரி பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே மக்கள் யாரும் கொடிவேரிக்கு வர வேண்டாம் வலியுறுத்தப்படுகிறது என தெரிவித்தனர்.

இதையடுத்து கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News