உள்ளூர் செய்திகள்

தக்கலை அருகே குப்பை கழிவுகள் கொண்டு வந்த 3 டெம்போ சிறைபிடிப்பு

Published On 2023-07-23 09:57 GMT   |   Update On 2023-07-23 09:57 GMT
  • குப்பைகளை கொண்டு வந்து ஆங்காங்கே ரோட்டோரங்களில் டெம்போவில் கொட்டுவது வழக்கமாக உள்ளது
  • போலீசை கண்டதும் தப்பி ஓடிய டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து ஆங்காங்கே ரோட்டோரங்களில் டெம்போவில் கொட்டுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை தக்கலை அருகே காட்டாத்துறை பகுதியில் 3 டெம்போவில் குப்பை கழிவுகள் ஏற்றி கொண்டு வந்து வெள்ளிகோடு பகுதியில் கொட்ட முயற்சித்தனர். அபபகுதி மக்கள் ஒன்றிணைந்து டெம்போவை முற்றுகையிட்டனர். தொடர்ந்து தக்கலை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 டெம்போவை பறிமுதல் செய்தனர். போலீசை கண்டதும் தப்பி ஓடிய டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News