உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 511 இ-சேவை மையங்கள் தொடங்க அனுமதி

Published On 2023-06-15 07:02 GMT   |   Update On 2023-06-15 07:02 GMT
  • ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்
  • விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம்

நாகர்கோவில் :

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட் டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங் களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 511 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங் கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் நோக்கமானது, இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதா கும்.

இத்திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்திட (https://tnesevai.tn.gov.in/) (அல்லது) (https://.tnega.tn.gov.in/) என்ற இணைய முகவரியை பயன்படுத்தவும், விண்ணப்பதாரர்கள் ஜூன் 1 முதல் 30-ந்தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். கிராமப் புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பகட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும்.விண்ணப்பதாரர் களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக் கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங் கப்படும்.

மேலும், அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை முகவரி ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://.tnega.tn.gov.in இணையதளத்தில் காணலாம்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News