உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் விழா - விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்பு

Published On 2022-12-25 07:29 GMT   |   Update On 2022-12-25 07:29 GMT
  • மகிளா காங்கிரஸ் தலைவி ஷர்மிளா ஏஞ்சல் தலைமை தாங்கினார். போதகர் சாலமன் ஜெபம் செய்தார். விழாவில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
  • பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

நாகர்கோவில் :

குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மார்த்தாண்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஷர்மிளா ஏஞ்சல் தலைமை தாங்கினார். போதகர் சாலமன் ஜெபம் செய்தார். விழாவில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் படங்களுடன் விஜய் வசந்த் எம்.பி. தயாரித்துள்ள காலண்டர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் விஜய்வசந்த் எம்.பி. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டூவர்ட், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், அசோகன், டிஜு மற்றும் கிரிஷ்டல், ரமணி, பமலா, மெற்டில்டா, முத்துமலர், ஸ்மிதாராணி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், மாநகர முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News