உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே பூட்டிய வீட்டில் போதகர் பிணம்

Published On 2023-05-10 07:16 GMT   |   Update On 2023-05-10 07:16 GMT
  • வீடுகளுக்கு சென்று ஜெபம் செய்து விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார்.
  • வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது சட்டையில் ரத்தம் படிந்திருந்தது.

கன்னியாகுமரி :

களியக்காவிளை அருகே குளப்புறம் பகுதியை சேர்ந்தவர் ஆஸ்டின் ஜெனிஷ் (வயது 62). இவருக்கு திருமணம் ஆக வில்லை. இவர் குளப்புறம் பகுதியில் தனிமையில் வசித்து வந்தார். இவர் அருகில் உள்ள பெந்தகோஸ்தே ஆலயத்தில் போதகராக இருந்தார்.

இவர் பல இடங்களுக்கு சென்று ஜெபம் செய்வது வழக்கம். சம்பவத்தன்று காலையில் வீடுகளுக்கு சென்று ஜெபம் செய்து விட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்குள் சென்று உள்பக்கமாக கதவை பூட்டிவிட்டு தூங்கியுள்ளார். மேலும் 2 நாட்களாக ஆஸ்டின் ஜெனிஷ் வெளியே வராததினால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அவர் வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார். அவரது சட்டையில் ரத்தம் படிந்திருந்தது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோத னைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டில் போதகர் இறந்து கிடந்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News