உள்ளூர் செய்திகள்
குலசேகரத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
- செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.
- குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
குலசேகரம் அண்ணா நகர் சாணல்கரை பகுதியைச் சேர்ந்தவர் தினுகுமார் (வயது 31), தொழிலாளி.
இவரது மனைவி நிஷாந்தி (26). இவர்களுக்கு 6 வயதில் மகனும் 4 வயதில் மகளும் உள்ளனர். கடந்த 31-ந் தேதி தினு குமார் வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டார். மாலையில் அவர் திரும்பிய போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. உறவினர் வீடுகளில் விசா ரித்த போதும் நிஷாந்தி மற்றும் குழந்தைகள் பற்றிய விவரம் தெரியவில்லை.
நிஷாந்தியின் செல்போ னுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. எனவே குல சேகரம் போலீசில் தினு குமார் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிவு செய்து நிஷாந்தி மற்றும் அவரது மகன், மகளை தேடி வருகிறார்.