உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே முன்னாள் நாட்டாமைக்கு அடி-உதை;2 பேர் கைது

Published On 2023-06-02 08:55 GMT   |   Update On 2023-06-02 08:55 GMT
  • குருசாமியிடம் அந்தோணி ராஜ் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
  • போத்திராஜ், ராஜ் ஆகியோர் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 65). இவர் கடந்த 4 ஆண்களுக்கு முன்பு நாட்டாமையாக இருந்ததாகவும், அதற்கு முன்பு சுப்பையா என்பவர் நாட்டாமையாக இருந்த தாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாத கூட்டம் நடக்கும்போது குருசாமி, சுப்பையாவிடம் பொதுக்க ணக்கில் பற்றாக்குறையாக இருந்த பணத்தை கட்ட வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணி ராஜ்(37), முத்துராஜ்(32), குமார்(44), சுப்பையா, செந்தில்குமார்(47) ஆகியோர் குருசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரை தலையில் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் குமார், ஊர் பொது வீட்டில் வாடகைக்கு இருந்து வருகின்றார். மாதக் கூட்டத்தில் வாடகை கட்ட வந்தபோது அங்கிருந்த குமாரின் தம்பி அந்தோணி ராஜ் என்பவரிடம் குருசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனை தடுக்க வந்த போத்திராஜ்(31), ராஜ் ஆகியோர் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குருசாமி மற்றும் குமார் அளித்த புகாரின் பேரில் 2 வழக்குகள் பதிவு செய்த சங்கரன்கோவில் டவுண் போலீசார் அந்தோணி ராஜ், போத்திராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் குருசாமி, முத்துராஜ், குமார், சுப்பையா, செந்தில்குமார், ராஜ் ஆகியோரை வலைவீசி தேடுகின்றனர்.

Tags:    

Similar News