உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-17 09:17 GMT   |   Update On 2023-05-17 09:17 GMT
  • ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

கோவை,

மதுரையை சேர்ந்த வக்கீல்கள் முகம்மது அப்பாஸ், யூசுப் ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு அகில இந்திய வக்கீல்கள் சங்கம், சமூக நீதி வக்கீல்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமை கழகம், இந்திய வக்கீல்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வக்கீல்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News