உள்ளூர் செய்திகள்

புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2024-07-01 09:48 GMT   |   Update On 2024-07-01 09:48 GMT
  • மத்திய அரசு ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய சட்டத்தை திருத்தம் செய்வதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
  • திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் சுப்புராஜ் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர்:

குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச்சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதம், இந்தி மொழியில் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்தும், புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் பார் அசோசியேஷன் தலைவர்.கே.என்.சுப்பிரமணியம் தலைமையில் வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வக்கீல்கள் மத்திய அரசு ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய சட்டத்தை திருத்தம் செய்வதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில் அட்வகேட் அசோசியேசன் தலைவர் பூபேஷ் , திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் சுப்புராஜ் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News