உள்ளூர் செய்திகள்

மதுரையில் விபத்து; 2 பேர் பலி

Published On 2023-05-15 08:05 GMT   |   Update On 2023-05-15 08:05 GMT
  • மதுரையில் நடந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
  • அந்த வழியாக வந்த ஆட்டோ நடராஜன் மீது மோதியது.

மதுரை

மதுரை விளாச்சேரி ஜோசப்நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது52). இவர் இருசக்கர வாகனத்தில் ஹார்விபட்டி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ நடராஜன் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் பலனின்றி நடராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர் கிருஷ்ணமூர்த்தி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்மோதி வாலிபர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூர் வாலாந்தரவையை சேர்ந்தவர் ஆசாத் கோஸ் (வயது38). இவர் இருசக்கர வாகனத்தில் மேலூர் மெயின்ரோடு உத்தங்குடி சென்றார். அப்போது கூடலூர் கவர்னர் தெருவை சேர்ந்த அபூபக்கர் சித்திக் என்பவர் ஓட்டி வந்த கார் ஆசாத் கோஸ் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து பற்றி ஆசாத் கோசின் தாய் முனி யம்மாள் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News