உள்ளூர் செய்திகள் (District)

மகாளய அமாவாசை: மேல்மலையனூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

Published On 2024-10-03 04:57 GMT   |   Update On 2024-10-03 04:57 GMT
  • மாதம்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம்.
  • ஸ்ரீ வைஷ்ணவி தேவி அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதம்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.

உற்சவ அம்மனுக்கு ஸ்ரீ வைஷ்ணவி தேவி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிர காரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இரவு 11 மணி அளவில் அங்கிருந்த அம்மன் பம்பை, மேளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்ப பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்தார்.

பின்பு பூசாரிகள் பக்தி பாடல்கள் பாடினர். இரவு 12 மணி அளவில் அம்மனுக்கு அர்ச்சனையும், மகா தீபாரா ணையும் நடைபெற்றவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்து அம்மன் மீண்டும் கோவிலின் உள்ளே சென்றார்.

விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

Similar News