உள்ளூர் செய்திகள் (District)

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது

Published On 2023-11-23 09:42 GMT   |   Update On 2023-11-23 09:42 GMT
  • பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார்.
  • வாலிபரை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.

மாரண்ட அள்ளி,

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியை சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த இன்பசேகரன் (வயது 25). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார்.

இதையறிந்த தரும்புரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் வாலி பர் மீது நட வடிக்கை எடுக்க கோரி மாரண்டஅள்ளி போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மாரண்டஅள்ளி போலீ சார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Similar News