உள்ளூர் செய்திகள்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அமைச்சர் உதயநிதி

Published On 2024-06-10 04:31 GMT   |   Update On 2024-06-10 04:31 GMT
  • 10 நாள் பயணமாக லண்டன் சென்றிருந்தார்.
  • நேற்றிரவு சென்னை திரும்பினார்.

சென்னை:

தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு மே மாதம் 10 நாள் பயணமாக லண்டன் சென்றிருந்தார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் அவர் லண்டன் சென்றதாக கூறப்பட்டது. அதன் பிறகு அவர் சென்னை திரும்பி னார்.

இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகு கடந்த 4-ந் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறுபடியும் லண்டன் புறப்பட்டுச் சென்றார். 5 நாள் பயணமாக லண்டன் சென்றிருந்த அவர் நேற்றிரவு சென்னை திரும்பினார்.

Tags:    

Similar News