உள்ளூர் செய்திகள்

வானகரத்தில் விபத்தில் முதியவர் பலி

Published On 2023-05-18 07:23 GMT   |   Update On 2023-05-18 07:23 GMT
  • மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையில் நேற்று இரவு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
  • அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

மதுரவாயல்:

வானகரம் அருகே மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையில் நேற்று இரவு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News