உள்ளூர் செய்திகள்

பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவினர் மாமல்லபுரம் வருகை: மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வரவேற்றார்

Published On 2023-03-06 15:07 GMT   |   Update On 2023-03-06 15:07 GMT
  • செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கடற்கரை கோயில் வளாகத்தில் அவர்களை வரவேற்றார்.
  • சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மாமல்லபுரம்:

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் கொண்ட பொதுக் கணக்கு குழுவினர் மாமல்லபுரம் வந்தனர். அவர்கள் இன்று மாலை மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர்.

முன்னதாக நேற்று பாண்டிச்சேரி சென்ற அவர்கள் இன்று மதியம் கோவளம் வந்து அங்குள்ள பிஷர்மேன்கோ நட்சத்திர விடுதியில் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் மார்ச் இறுதி ஆண்டுக் கணக்கு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கடற்கரை கோயில் வளாகத்தில் அவர்களை வரவேற்றார். சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் தாசில்தார், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News