உள்ளூர் செய்திகள்

தலைவர்கள் சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மாலை அணிவித்து மரியாதை

Published On 2023-09-30 09:24 GMT   |   Update On 2023-09-30 09:24 GMT
  • பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மாலை அணிவித்து மரியாதை
  • தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பெரம்பலூர்,

பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட மாணவரணி செயலாளருமான தமிழ்செல்வனை அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று பெரம்பலூர் திரும்பிய தமிழ்செல்வனுக்கு மாவட்ட எல்லையான திருமாந்துறை டோல் பிளாசவில் அ.தி.மு.க.வினர் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் பெரம்பலூரில் உள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர், பேரூர் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News