உள்ளூர் செய்திகள்

நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தல்

Published On 2023-04-22 07:34 GMT   |   Update On 2023-04-22 07:34 GMT
  • நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தபட்டது
  • மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் விரைவில் நரிக்குறவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படும் என கூறினார்

பெரம்பலூர்:


பெரம்பலூர் கலெக்டர் கற்பகத்திடம் தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மாநில தலைவர் காரை சுப்ரமணியன் அளித்துள்ள மனுவில், மத்திய, மாநில அரசுகள் நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசிதழில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி நரிக்குறவர் இன பிள்ளைகள் மேல்படிப்பு படிப்பதற்க்காக நடப்பு கல்வியாண்டில் சாதி சான்றிதழ் அவசியம் தேவைபடுகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் விரைவில் நரிக்குறவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படும் என கூறினார் .


Tags:    

Similar News