உள்ளூர் செய்திகள் (District)

பசுமை பட்டாசுகளை மக்கள் பயன்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்

Published On 2023-11-01 07:18 GMT   |   Update On 2023-11-01 07:18 GMT
  • தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை பட்டாசுகளை மக்கள் பயன்படுத்த அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தி உள்ளார்
  • புதுக்கோட்டையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவுறுத்தல

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:- பட்டாசு வெடிக்கும் போது ஒலி அளவு 110 லிருந்து 170 வரை அதிகமாக ஒலிவந்து ஒலிமாசு ஏற்படுகிறது. ஆனால் பசுமைப் பட்டாசை பொறுத்தவரை 100-ல் இருந்து 110 டெசிபில் அளவிற்கு தான் வெடிக்கக் கூடியது அதனால் ஒலிமாசும் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால் நாம் அனைவரும் இயற்கையை பாதுகாப்பதற்கு பசுமை பட்டாசு சத்தம் குறைவு உள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

பசுமை பட்டாசுகள் குறித்து வருவாய்த்துறை மூலம் போதிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தான் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. பசுமை பட்டாசு உற்பத்திக்கு என்று சதவீதம் நிர்ணயிக்கவில்லை. பசுமை பட்டாசை படிப்படியாக கொண்டு வரும் பொழுது முழுமையாக பசுமை பட்டாசு பயன்பாடு முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News