உள்ளூர் செய்திகள்
செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி
- விழாவில் அம்பாளுக்கு நறுமண பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் கடந்த செவ்வாய் கிழமை கொடை விழா நடைபெற்ற நிலையில் 8-ம் நாள் காலை ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நறுமண பொருட்களால் அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபார தனை காண்பிக்கப்பட்டது.இரவு அம்பாளுக்கு பல்வேறு வண்ண மயமான நறுமண பூக்க ளால் சிறப்பு புஷ்பா ஞ்சலி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து அவர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.