போலீஸ்காரர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
- உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
- சாலை விபத்தில் உயிரிழந்தார்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ள புதூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் இளங்கோ (29). இவர் கடந்த 6 ஆண்டுகளாக காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ்கரராக பணியாற்றி வந்தார்.
கடந்த 20-ந் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்ற இளங்கோ பணி முடிந்தவுடன் நள்ளிரவு பைக்கில் வீடு திரும்பினார்.
அப்போது பனப்பாக்கம் பெருவளையம் சாலையில் விரிவாக்க பணி நடைபெறும் இடத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து, போலீஸ்காரர் இளங்கோ வின் இறுதிச்ச டங்கு அவரது சொந்த ஊரான பாணாவரம் அடுத்த புதூரில் நேற்று நடந்தது.
இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சற்குணன் தலைமையிலான போலீசார் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இளங்கோவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதில் காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன், பாணாவரம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் முன்னதாக காஞ்சிபுரம் எஸ்.பி சுதாகர், இளங்கோவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.