உள்ளூர் செய்திகள் (District)

ராணிப்பேட்டையில் ஓய்வூதியர் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து

Published On 2022-09-04 08:33 GMT   |   Update On 2022-09-04 08:33 GMT
  • நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது
  • நாளை நடைபெற இருந்தது

ராணிப்பேட்டை:

ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் குறை தீர்வு நாள் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதாக இருந்தது.

நிர்வாக காரணங்களால் அன்று நடைபெற இருந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

அடுத்த கூட்டம் தேதி சென்னை ஓய்வூதியர் இயக்குனரிடம் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும்.

ஏற்கனவே ஓய்வூதியர் குறை தீர்வு நாள் கூட்டம் தொடர்பாக விண்ணப்பம் செய்திருந்த ஓய்வூதியர்கள் மற்றும் விண்ணப்பம் தொடர்புடைய துறை அலுவலர்கள் யாரும் கலெக்டர் அலுவலகம் வரத் தேவையில்லை.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News