உள்ளூர் செய்திகள் (District)

ஓமலூர் அருகே மூதாட்டி வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை

Published On 2024-09-23 09:06 GMT   |   Update On 2024-09-23 09:06 GMT
  • மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
  • கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர்.

காடையாம்பட்டி:

ஓமலூர் அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மலை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் இருசா கவுண்டர். இவரது மனைவி குமாரி (50). இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார். இந்த நிலையில் மகனும், கணவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் குமாரி மட்டும் கூலி வேலைக்கு சென்று தனியாக வசித்து வந்தார்.

குமாரி அருகில் வசித்து வரும் நீலா என்பவரது வீட்டிற்கு தினமும் டி.வி. பார்க்க சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமாரி நீலா வீட்டிற்கு டி.வி. பார்க்க செல்லவில்லை.

மேலும் குமாரியும் வீட்டிற்கு வெளியே வரவில்லை. இதனால சந்தேகமடைந்த உறவினர்கள் இன்று காலை குமாரி வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர் வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், ஓமலூர் டி.எஸ்.பி. சஞ்சய் குமார், தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்ட குமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மூதாட்டி குமாரி சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டாரா? மேலும் வேறு என்ன காரணம் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News