உள்ளூர் செய்திகள்

3 வாலிபர்களிடம் ரூ18.84 லட்சம் நூதன மோசடி

Published On 2023-06-05 09:35 GMT   |   Update On 2023-06-05 09:35 GMT
  • ராஜ்குமார் செல்போனுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது.
  • இதனை நம்பி ரூ. 5 லட்சத்து 15 ஆயிரத்தை அனுப்பினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கவியரசன் (வயது 28), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவருக்கு கடந்த 27 ஆம் தேதி இவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் ஒன்று வந்துள்ளது இதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு

லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது அதன்படி கவியரசன் ரூ1000 அனுப்பிய நிலையில் 2000 ரூபாய் கிடைத்தது இதனால் நம்பிக்கை அடைந்த கவியரசன் இப்படியாக ரூ.7லட்சத்து47 ஆயிரத்து 199 ரூபாய் பல்வேறு வங்கி கணக்கு மூலம் அனுப்பி உள்ளார் அதன் பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது அறிந்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கவியரசன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதேபோல் ஊத்தங்கரை பி. மல்லிப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார்(33) என்பவர் தனது செல்போனுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது இதனை நம்பி ரூ. 5 லட்சத்து 15 ஆயிரத்தை அனுப்பினார் இதன் பின்னர் இவரும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை

மேலும் கிருஷ்ணகிரி அடுத்த என்னேகோல்புதூர் ஒட்டப்பட்டி சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹரிஷ் (27)கடந்த 31ஆம் தேதி இவரது செல்போனுக்கு கமிஷன் அடிப்படையில் வேலைவாய்ப்பு இருப்பதாய் கூறி வந்த மெசேஜை நம்பி ரூ.6 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து இவரும் ஏமாற்றம் அடைந்துள்ளார் இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News