உள்ளூர் செய்திகள்

வயநாடு நிலச்சரிவால் பாதித்த மக்களுக்காக திருப்பூர் கலெக்டரிடம் நிதி வழங்கிய பள்ளி மாணவிகள்

Published On 2024-08-12 09:12 GMT   |   Update On 2024-08-12 09:12 GMT
  • குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள பொதுமக்களிடம் நேரடியாக சென்று நிதி பெற்றனர்.
  • மாணவிகளின் இந்த செயலை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

திருப்பூர்:

திருப்பூர் திருக்குமரன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மாணவிகள் நபிஷா, சுபிக்ஷா.இருவரும் வாவிபாளையம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய முன்வந்தனர். அதற்காக 2 பேரும், தாங்கள் குடியிருக்கும் வீட்டின் அருகில் உள்ள பொதுமக்களிடம் நேரடியாக சென்று நிதி பெற்றனர். அவ்வாறு பெற்ற நிதியை இன்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வழங்கினர். மாணவிகளின் இந்த செயலை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News