உள்ளூர் செய்திகள்

சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கண்டித்து சென்னையில் சீமான் ஆர்ப்பாட்டம்

Published On 2024-08-04 07:32 GMT   |   Update On 2024-08-04 07:32 GMT
  • சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம்.
  • தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சென்னை:

தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, மின் கட்டண உயரவை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை தமிழக அரசு சரி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News