உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published On 2023-05-13 07:58 GMT   |   Update On 2023-05-13 07:58 GMT
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
  • பாத்திமா கனி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள சாகீர்உசேன் கல்லூரியில் ''நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம்'' சார்பில் தமிழக அரசின் ''நான் முதல்வன்'' திட்டத்தின் கீழ் "கல்லூரிக்கனவு-2023" என்னும் தலைப்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் திருப்புவனம், அல்லிநகரம், சாலைகிராமம், முனைவென்றி, அனுமந்தகுடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலுவதின் முக்கியத்துவம் மற்றும் உயர்கல்வி பாடப்பிரிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ்சேக் அப்துல்லா, பாத்திமா கனி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்

Tags:    

Similar News