உள்ளூர் செய்திகள்

மானாமதுரை அருகே கார் மோதி மூதாட்டி பலி

Published On 2023-06-14 08:05 GMT   |   Update On 2023-06-14 08:05 GMT
  • மானாமதுரை அருகே கார் மோதி மூதாட்டி பலியானார்.
  • இறந்த முதியவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அன்னவாசல் கால்வாய் பாலம் அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யப்பன் மகன் அசின் என்பவர் ஓட்டிச்சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலியானார். தகவலறிந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் பெரும்பச்சேரி குரூப் கிராம நிர்வாக அதிகாரி செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பஸ் நிலை யத்தில் அடையாளம் தெரி யாத 80 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து திருப்பத்தூர் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரி விக்னேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News