உள்ளூர் செய்திகள் (District)

பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-08-23 07:25 GMT   |   Update On 2023-08-23 07:25 GMT
  • பழனியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • சிவகங்கை ஆவரங்காடு பகுதியில் உள்ள இந்த கோவில் 90 வருடங்கள் பழைமையானது.

சிவகங்கை

சிவகங்கை ஆவரங்காடு பகுதியில் உள்ள 90 வருடங்கள் பழைமையான சிவஞான பழனியாண்டவர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் கோவில் ஸ்தானிகர் கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழா குழுவினர் கோபால்துரை, கோபாலகிருஷ்ணன், சுரேஷ்குமார், சரவணன், கணேசன், காளிஸ்வரன், மதன், சங்கர், சுந்தர், வெங்கடேஷ், முத்துவேல் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதற்கான ஏற்பாடுகள் செய்தனர்.

Tags:    

Similar News