உள்ளூர் செய்திகள் (District)

மாநில கால்பந்து போட்டி

Published On 2023-11-17 07:45 GMT   |   Update On 2023-11-17 07:45 GMT
  • சுழல் வெள்ளி கோப்பைக்கான மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் நடத்தப்பட்டது.
  • காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

காரைக்குடி

காரைக்குடி சவுத் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தெற்கு தெரு இளைஞர்களால் முதலாம் ஆண்டு சுழல் வெள்ளி கோப்பைக்கான மாநில அளவிலான எழுவர் கால்பந்து போட்டி காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் நடத்தப்பட்டது.தமிழ்நாடு முழுவதும் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. பரபரப்பாக நடைபெற்ற இறுதி போட்டி யில் கே.ஆர்.பிரதர்ஸ் தெற்கு தெரு அணியும், என்.எஸ்.கே. கண்டனூர் பாலையூர் அணியும் மோதின.

ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமன் ஆகி டைபி ரேக்கர் வழங்கப்பட்டு அதி லும் சமனாகி வெற்றியாளர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசான ரூ.50,001 மற்றும் வெள்ளி கோப்பையை என்.எஸ்.கே. கண்டனூர் பாலையூர் அணியினர் பெற்றனர்.

இரண்டாம் பரிசு ரூ.40001 ஐ கே.ஆர்.பிரதர்ஸ் தெற்கு தெரு காரைக்குடி அணியினர் பெற்றனர். 3-வது மற்றும் 4-வது பரிசுகளை முறையே யுனைடட் கால்பந்து கிளப் காட்டு தலைவாசல் மற்றும் செய்யாறு அணிகளும் பெற்றன.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இதில் அனைத்து கட்சி பிர முகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தினர். போட்டிக்கான ஏற்பாடுகளை கே.ஆர்.பிரதர்ஸ் அணி தலைமை நிர்வாகி குமரன், உறுப்பி னர்கள் சிறப்பாக செய்தி ருந்தனர்.

Tags:    

Similar News