உள்ளூர் செய்திகள் (District)

செங்கல்பட்டு அருகே கார்-அரசு பஸ், வேன் அடுத்தடுத்து மோதல்: 11 பேர் படுகாயம்

Published On 2023-05-15 07:08 GMT   |   Update On 2023-05-15 07:08 GMT
  • விபத்தில் வேனில் பயணம் செய்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
  • செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு புறவழிச்சாலை பச்சையம்மன் கோவில் அருகே சென்னையை நோக்கி இன்று காலை கார் சென்று கொண்டிருந்தது. பின்னால் அரசு பஸ், வேன், லாரி என அடுத்தடுத்து வாகனங்கள் வந்து கொண்டு இருந்தன.

இந்த நிலையில் காரின் வேகத்தை டிரைவர் திடீரென குறைத்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பின்னால் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற வேன், அரசு பஸ்சின் பின்புறம் மோதியது. இதைத்தொ டர்ந்து வேனின் பின்புறம் லாரி மோதியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேன், லாரி பலத்த சேதம் அடைந்தது. விபத்து காரணமாக திருச்சி- சென்னை மார்க்கத்தில் உள்ள புறவழிச்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மற்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News